நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

ஜில் கதைகள் - காஃபி வித் காதல்


ஃபேஸ்புக்ல நம்ம தோஸ்த் ஒருத்தரு இப்டி ஒரு ஸ்டேட்டஸ் போட்ருந்தாரு

சரி நாமளும் ஒரு ட்ரை பண்ணுவோமேன்னு எழுதி வெச்சேன். இனி ஓவர் டூ கதை
*********************************************************************************************************************
காலையிலிருந்து செம வேலை. ஜில் பே பக்கமே நான் போகவில்லை. ஆறு மணி இருக்கும். எங்கிருந்தோ ஜில் வாசனை அடிப்பது போலிருந்தது. சுற்றிலும் கண்ணை ஓடவிட்டேன். தூரத்தில் ஜில் நடந்து வருவது தெரிந்தது. இயல்பாய் கவிஞர்கள் வர்ணிக்கும் எந்த நடையழகும் ஜில்லுக்குப் பொருந்தாது. மிக யதார்த்தமான ஒரு நடை. போன பிறவியில் தேவதையாக பிறந்திருந்த போதும் அவள் இப்படித்தான் நடந்தாக நினைவு.
இப்போது தெளிவாக பார்க்க முடிவது போல நெருங்கி விட்டிருந்தாள். எங்கிருந்தோ கசிந்த ஏசி காற்று அவளது கூந்தலையும் என் மனசையும் சேர்த்து கலைத்துவிட்டுப்போனது. லேசாக லிப்ஸ்டிக் போட்டிருந்தாள். நெற்றியிலிருந்து அந்த ஸ்ட்ராபெரி உதடுகளை ஒட்டி விழுந்திருந்த முடிகற்றை அவளை இன்னும் செக்ஸியாக காட்டியது.
ஜில்லு நீ ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ் டீ என அவளிடம் லட்சம் தடவை சொல்லியிருக்கிறேன். நிலவொன்றை டெலக்கோப் வைத்து பார்த்தது போல இருக்கும் அப்போது அவளது வெட்கம் கலந்த சிரிப்பு.
இரண்டு கைகளையும் டேபிளில் ஊன்றி நின்றாள். நிஜமாகவே வேலை போனாலும் பரவாயில்லை என முத்தமிட்டு விடலாமா எனப்பார்த்தேன். அதற்குள் நல்லவேளை பேசிவிட்டாள்.
"டேய்"
"ம்ம்ம்...சொல்லு ஜில்லு" என்றேன் குரலில் காமத்தை தோய்த்துக்கொண்டு.
அதைக்கண்டுகொண்டவளாக "பிச்சுடுவேன் நாயே...Officeல போயி"
"அட...அப்ப எடம் தான் பிரச்சன மேடம்க்கு...,மத்ததெல்லாம் ஓக்கே தான்" என்றேன் கண்ணடித்துக்கொண்டே.
................ கண்ட்டினியூ
**********************************************************************************************************************
இங்கிருந்து நான் கதையைத் தொடர்கிறேன்
**********************************************************************************************************************
போடா.. லூசு..” என்றபடி நெற்றி முடியை ஒதுக்கினாள்.. கூட ஒரு க்ளுக் சிரிப்பு வேறு.
 ”ஆமாமாம்..” சீட்டிலிருந்து எழுந்து அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி நின்றேன்.

ஏன்டா இப்டி embarrass பண்ற .??”  வழக்கம்போல என் கண்ணைப் 
பார்க்காமல்..உதட்டோரம் சிரித்தபடிகாஃபி போலாம்..வரியாஎன்றாள்.

வித் ப்ளெஷர் ஜில்லு..”

  அக்செஸ் கார்டை ஒரு கையிலும்.. அவளின் விரல்களை மறு கையிலும் பிடித்தபடி..அந்த கண்ணாடிக் கூண்டை விட்டு வெளியே நடக்கத் தொடங்கினேன்.
 ”லிஃப்டா...??”

 ”வேணாம்டா... டக்குனு கீழ போய்டுவோம்... ஸ்டெப்ஸ்லயே போலாம் “.  தேவதை பேச்சுக்கு ஏது மறு பேச்சு.. வியர்க்க விறுவிறுக்க ஏழு மாடி இறங்கி காரிடாருக்கு வந்தாயிற்று.

ஒரு காஃபிக்கு ஏழு மாடி ஓவர் ஜில்லு..ஏண்டி இப்டி ஓட விட்ற.”

 “போடா... காஃபிக்காக ஒன்னும் நான் உன்ன கூப்டல... Just felt like talking to you. அதான்

 மொத்த வியர்வையும் அடங்கிப் போய் உடலும் மனமும் ஐஸ் அண்டார்டிக்காவானது எனக்கு. அட என்னடா இவ..நமக்குள்ள தூங்கிட்டுருக்குற  தபூ சங்கர எழுப்பாம விட மாட்டா போலருக்கே என நினைத்தபடி,

சொல்லுடா. அதான் வந்துட்டேன்ல.. “ வாய் மட்டுமில்லாமல் சகலமும் சிரித்தது எனக்கு.

ஹ்ம்ம் சும்மாதான்… இப்போ நான் கூப்ட உடனே டக்குன்னு கெளம்பி வந்தல்ல.. அதேமாறி நான் என்ன சொன்னாலும் கேள்வி கேக்காம செய்வியா ? “

“ஹைப்போதெட்டிகல் க்வெஸ்டின் ஜில்லு.. நீ என்ன கேக்குறங்குறதப் பொறுத்து நான் எப்டி ரியாக்ட் பண்ணுவேங்குறது மாறலாம் “ கண்ணடித்தபடி சொன்னேன்.

“எப்பப்பாரு இதே பேச்சு..dog… “ அந்த தெற்றுப்பல்லைக் கடித்தபடி என் வலது கையில் ஒரு நறுக் கிள்ளு விழுந்தது.

அழகுப் பிசாசு… அந்தக் கண்களும்.. சிரிப்பும்.. காற்றில் பறக்கிற கத்தி முடியும்… மிதந்தபடி நடக்கிற நடையும்.. மனதுக்குள் “வேற எதடீ நெனைக்க விட்ட..?” சொல்லிக்கொண்டேன்.

“லவ் யூ ஜில்லு”

“ஹ்ம்ம் ஹ்ம்ம்…I know that.. But dunno how long u could do that... “
இங்க்லீஷைக் கண்டுபிடித்தவன் கூட இந்த தொனியில் பேசியிருக்கமாட்டான் ஜில்லு. என்ன ஒரு ஸ்டைல். மனது எலக்ட்ரான்.. நியூட்ரான்.. ப்ரோட்டானாக.. ஜில்லுவை ரசித்துக் கொண்டிருந்தது.

வாய்… “ஏன் ஜில்லுமா..ஏன்…?? அதான் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல. நம்ம ரிலேஷன்ஷிப் ந்யூட்டன்ஸ் ஃபர்ஸ்ட் லா மாதிரி stays in motion with the same speed and in the same direction unless acted upon by an unbalanced force. அந்த அன்பேலன்ஸ்ட் ஃபோர்ஸ் நீதான். போதுமா “ என்றது.

அந்த நேனோ செகண்ட் கோபத்தில் மூளை பரபரத்து கையிலிருந்த காஃபி கீழே கொட்டியபோது.. இடது பேண்ட் பாக்கெட்டில் விர்ரிட்ட செல்ஃபோனைக் கையிலெடுத்துப் பார்த்தேன்.

Jillu Calling...

கம்பனும் காதலும் – கண்ணும் கண்ணும் நோக்கியா


ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கம்பராமாயண அமர்வுல என்னுடைய முறைக்காக பாடல்களை படிச்சுட்டு இருந்தேன். விசுவாமித்திரர் இராமன் இலக்குவனோடு மிதிலைக்குள் நுழையும்போது சீதையும் இராமனும் ஒருத்தருக்கொருத்தர் முதல் முறை பாத்துக்குறாங்க.அப்புறம் வேற என்ன ‘கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு.. காதல் வந்து ஒட்டிக்கிச்சு…’ தான்.

இராமாயணத்துலயும் most romantic பாடல்கள் இந்த பகுதிகள்ல தான் வருது. நமக்கு பிடிச்ச ஏரியாங்குறதால நானும் ரசிச்சு ரசிச்சு படிச்சேன். ஊர் உலகத்துக்கே தெரிஞ்ச ‘அண்ணலும் நோக்கினான்..அவளும் நோக்கினாள்’ வரியும் இங்கதான்.

அழகோட எல்லை இதுதான்னு மனசால நினைக்கமுடியாத அளவுக்கு அழகுடைய சீதை… அரண்மனை மாடத்துல நின்னுட்டு இருக்கும்போது வீதியில நடந்து போற இராமனை பாக்குறாங்க… அதே நேரத்துல இராமனும் சீதைய பாக்குறாரு (எப்டின்னெல்லாம் கேக்காதீங்க..அதெல்லாம் வசூல்ராஜால வர மாதிரி ஃபீலிங்க்ஸ்… ;) ) அவங்க ரெண்டு பேரோட பார்வையும் ஒன்னை ஒன்னு அப்படியே கவ்விடுச்சாம். அவங்க ரெண்டுபேருடைய மனசும் அதனதன் இடத்துல நிக்காம அப்படியே அலைஞ்சு திரிஞ்சு ஒன்னா கலந்துடுச்சு.

’எண்ணரு நலத்தினாள் இணைய நின்றுழிக்

கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று

உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’


தமிழ் சினிமாவின் தலையாய கச்சாப்பொருளான காதல்ல அதிக முறை பயன்படுத்தப்பட்டது இந்த ‘கண்ணும் கண்ணும்’ சந்திச்சுக்குற scenario தான்.அதனைத் தொடர்ந்து மெளனமாய் பேசுறது… கண்ணாலேயே பேசுறதுன்னு ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு…

எனக்குத் தெரிஞ்சு தமிழ் சினிமால இந்த themeல வந்த பாடல்களையெல்லாம் சொல்றேன்…

”கண்ணாலே பேசிப் பேசி… கொல்லாதே” – படம்: அடுத்த வீட்டுப் பெண்

” மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்” - படம்: காதலிக்க நேரமில்லை

”பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா
பார்வை ஒன்றே போதுமே ! ” -படம்: யார் நீ

இதுக்கு அடுத்து இன்னொரு கம்பராமாயண பாட்டு…இதே படலத்துல.. அதுவும் சாதாரணம் இல்ல…

பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து.

ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்.

வரி சிலை அண்ணலும் வாள் - கண் நங்கையும்.

இருவரும் மாறிப் புக்கு. இதயம் எய்தினார்.

அதாவது இராமனும் சீதையும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்த (அழகை ரசித்துப் பருகிய ) பார்வை, கயிறு மாதிரி அவங்க ரெண்டு பேரின் உள்ளத்தையும் இணைச்சதனால… அவங்க மனசு இங்கயும்..இவர் மனசு அங்கயும் இடம் மாறி குடியமர்ந்துடுச்சு…. எப்புடீ…??!! :) :)

இந்த பாட்டை படிச்சதும் எனக்கு நினைவுக்கு வந்த திரையிசைப்பாடல்
”விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே”

வேற எதாவது ரெஃபரன்ஸ் இருக்கான்னு தேடுனா.. திருவள்ளுவர் ஏற்கனவே ரெண்டு மூனு சிக்ஸர் அடிச்சு வெச்சுருக்காரு…

”கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனு மில”

கண்ணும் கண்ணும் பேசிக்கும்போது அங்க வார்த்தைக்கு (மொழிக்கும்) என்னடா வேலை…?!! :)

”நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்னது உடைத்து”

நான் பார்த்தவள் பதிலுக்கு என்னைப் பார்க்கும்போது அந்த பார்வை எப்படி இருந்துச்சுன்னா… ஒரு பெரிய படையையே கொண்டுவந்து தாக்குன மாதிரி இருந்துச்சாம். இதுல ’தாக்கணங்கு’ங்குற வார்த்தை அழகால மத்தவங்கள மயக்குற மோகினி மாதிரியானவளைக் குறிக்கும். வெறும் அழகாலேயே நம்மை தோற்கடிக்கக்கூடியவள் ஒரு படையோட வந்து மோதினதுக்கு சமம்.. அந்த ஒற்றைப் பார்வை…!!

இதையே நம்ம பாவேந்தர் இப்படி சொல்லிருக்காரு….!!

"கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்

மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர்கடுகாம்”

சரி… பார்வை மட்டுந்தானா… வேற ஒன்னுமில்லையா… இந்த சிரிப்பு இருக்கே (புன்)சிரிப்பு… அதையும் கம்பர் எழுதிருக்காரு… ஆனா ஒரு மாறுதலுக்கு பையனோட சிரிப்ப பாத்து பொண்ணு மயங்குறதை சொல்லிருக்காரு.

”இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்.

சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்;

சுந்தர மணி வரைத் தோளுமே அல;

முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே!”

( ரொம்ப இழுக்காம நம்ம ஸ்லாங்ல சொல்றேன்) சீதை சொல்றாங்க… ”இராமனுடைய ஹேர்ஸ்டைல பாத்தோ…அவனுடைய ஃபேஸ்கட்ட பாத்தோ… இல்ல அவனுடைய ஸ்ட்ராங்கான ஆர்ம்ஸைப் பாத்தோ நான் மயங்கல… அவனுடைய அந்த புன்சிரிப்பு இருக்கே..அது.. அது தான் அப்புடியே வந்து என் உசுரை அள்ளிட்டு போய்டுச்சு..”

பட்டாசுல்ல… :) :) :)

பி.கு: மேற்கண்ட சிச்சுவேஷன்கள் எல்லாத்துக்கும் பொருந்துகிற மாதிரியான திரையிசைப்பாடல்கள்.. அது பத்தின தகவல்கள்.... உங்களுக்கு தெரிஞ்சத..பிடிச்சத சொல்லுங்க…! :) :)

Images courtesy:Original Uploaders
Related Posts Plugin for WordPress, Blogger...