நானும் என் உலகும்

எனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA...!! எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

இசை சூழ் தனிமை - Playlist #1

Courtesy: http://www.hdwallpapers-3d.com

திரையிசைப் பாடல்களல்லாத பிற ஆல்பங்களைக் கேட்கிற ட்ரெண்ட் காலங்காலமாக நம்மிடையே இருந்து தான் வந்திருக்கின்றது. ஆங்கிலமோ, ஹிந்தியோ, கஸல் பாடல்களோ...அல்லது வேறேதும் இசைக்குழுக்களின் தனி ஆல்பங்களோ...இசைக்கோவைகளோ...ஏதோவொன்று மக்களை வந்தடைந்து அவர்களின் மனதைக் கவர்வதும் வாடிக்கையாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது. என்ன ஒன்று.. முன்பு கேசட்களின் காலத்தில் இந்த தேடலும் அடைதலும் கொஞ்சம் கடினம்.90களுக்குப் பின்னான சி.டி யுகத்தில் பெருநகரங்களில் இந்த மாதிரி தனி ஆல்பங்களைத் தேடிப்பிடிப்பதென்பது அத்தனை கடினமாகவெல்லாம் இல்லை.இன்றைக்கு உலகின் எந்த மூலையில் இருக்கிற இசைக்குழுக்களின் பாடல்களைக் கூட யூட்யூபிலேயே கேட்க முடியும்.

சரி...சுற்றி வளைக்காமல் விஷயத்துக்கு வருகிறேன்.

நண்பர்கள் மூலமாகவோ புத்தகங்கள் மூலமாகவோ அல்லது வேறெந்த வகையிலோ எனக்குப் பரிச்சயமாகி மனதுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்ட பாடல்களைப் பற்றி இந்த மாதிரி பட்டியல் போட்டு பகிரலாம் என்றிருக்கின்றேன்.என்னுடைய மனநிலைக்கு தகுந்தாற்போல ஏதோவொரு பாடலைத் தேர்ந்தெடுத்துக் கேட்டுக் கொண்டிருத்தல் ஒரு ரசனையான அனுபவம்.அதை உங்களுக்கும் கடத்திவிட முடியுமென்று நம்புகின்றேன்.

முதலில்

1. 2008ம் வருடம் சூப்பர் சிங்கரின் இரண்டாவது எடிஷன்.ரவி, ரேணு, அஜீஷ், பிரசன்னா,விஜய்  என எல்லாருமே அட்டகாசமான பாடகர்கள்.போட்டியின் இறுதிக்கட்டங்களில் ஒரு மெட்லி ரவுண்ட்.ஏதாவதொரு ராகத்தை எடுத்துக் கொண்டு அந்த ராகத்தில் அமைந்த வெவ்வேறு பாடல்களை இணைத்துப் பாடவேண்டும்.என்னுடைய favorite பாடகர் ரவி தேர்ந்தெடுத்தது சாருகேசி ராகம். ஒரு ஆலாபனையில் தொடங்கிய அவர் முதலில் பாடியது ‘வசந்த முல்லை போலே வந்து’ பாடல்.அதிலிருந்து ’ஆடல் கலையே தேவன் தந்தது’.இடையில் ஒரு ஹிந்தி கஸல் பாடலின் சரணம்.இறுதியாக ‘உதயா உதயா’ பாடலில் முடித்தார்.அட்டகாசமான ஒரு அனுபவம்.இந்த கலவையில் என்னைக் கவர்ந்ததென்னவோ அந்த ஹிந்தி கஸல் தான்.உடனே அவர் பாடிய வார்த்தைகளை நான் புரிந்து கொண்டவரையில்  ஆங்கிலத்தில் டைப் செய்து கூகிளில் தேடத் தொடங்கினேன். (jiz ta rab jaaye) ஆனால் எவ்வளவு தேடியும் என்னால் அந்த ஒரிஜினல் பாடலைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை,இந்தத் தேடல் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் போய்க்கொண்டிருந்தது.என்ன பாடல் கேட்டாலும் என்ன வேலை செய்தாலும் உள்ளுக்குள் இது ஓடிக்கொண்டே இருக்கும். இரண்டு வருடங்களுக்குப் பின் ஒரு யூட்யூப் கமென்டிலேயே தான் என் தேடலுக்கான விடை கிடைத்தது.


அந்த பாடல் ஹரிஹரன் அவர்களுடைய ’ஹாஸிர்’ (Hazir) கஸல் ஆல்பத்தில் வந்த 'ஷெஹர் தர் ஷெஹர்' (shehar dar shahar).ஹரிஹரனுடைய குரலே பட்டையைக் கிளப்பும்.இதில் உஸ்தாத் ஜாகிர் ஹுசைனின் தபேலாவும் சேர்ந்தால் the song goes to an entirely different level.எத்தனை முறை கேட்டிருப்பேனென்றே நினைவிலில்லை.So addictive...!தவறாமல் கேளுங்கள்


2.அடுத்ததாக கைலாஷ் கெர் (Kailash Kher).தமிழில் இவருடைய குரலை நிறைய கேட்டிருக்கலாம் (வெயிலோடு விளையாடி, ரங்கு ரங்கம்மா - பீமா, ஒரே ஒரு - அபியும் நானும்..இன்னும் ஏராளமான பாடல்கள்).வித்தியாசமான, Folk பாடல்களுக்கான பிரத்தியேகமான ஹைபிட்ச் குரல்.கைலாஷ் கெரின் அறிமுகம் M Tvயில் அடிக்கடி ஒளிபரப்பான Tauba Tauba பாடலின் மூலம்தான்.ஹிந்தி பாடல்களில் கொஞ்சம் ஆர்வம் வந்த பின்பு என்னுடைய வழக்கமான ஆ.கோ வினால் இவர் பாடிய எல்லா பாடல்களையும் தேடித்தேடிக் கேட்க ஆரம்பித்தேன்.(ஹிந்தி டாப்-10 திரைப்பாடல்களை கடைசியில் சொல்கிறேன்) அப்படி எதேச்சையாக யூட்யூபில் பார்த்தது தான் 'Tu kya Jaane'.

வழக்கமான வார்த்தைகளில் சொல்வதானால் இந்த பாடல் ஒரு விஷுவல் கவிதை.எனக்கு ஹிந்தி தெரியாததால் இந்த பாடல் வரிகளின் அர்த்தத்தை கூகிளில் தேடிப் பி(ப)டித்துத் தெரிந்து கொண்டேன்.
tu kya jaane
tu kya jaane
tu bin dil bin jazbaat allah jaane
mere jee ki baat tu kya jaane
tu bin dil bin jazbaat allah jaane

bhooli nahi abhi chandni raatein
bhooli nahi teri pyaari baatein
tujh bin ye din nahi bhaate
kya batayen hum

wohi khile khile sapne salone
bas gaye hon jo kone kone
ban gaye jazbaat khilone
dil tadpe par tu kya jaane
what do you know
what do you know
you are without heart and feelings, god knows..
what do you know about what's happening in my heart
you are without heart and feelings, god knows..

the moonlit nights aren't yet forgotten,
your lovely talks aren't yet forgotten,
without you I don't like these days,
what should I tell..

those blossoming beautiful dreams,
which lived in every corner,
the feelings became toys,
the heart is in agony but what do you know
செம்ம லிரிக்ஸ்... செம்ம ஃபீலிங்.. மொத்த பாடல் வரிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இங்கே

அப்புறம் M.Tv யின் கோக் ஸ்டூடியோ நிகழ்ச்சியில் வந்த இந்த பாடல்.அட்டகாசமான மிக்ஸ்.பாடகி தஞ்சாவூர் சின்னப்பொண்ணு கைலாஷ் கெர் கூட சேர்ந்து பட்டையை கிளப்பியிருப்பார்,.செம்ம  கொண்டாட்டமான பாட்டு.இதையும் கேட்டுடுங்க.




3.அடுத்தது 'Da Saz' என்கிற தில்லியைச் சேர்ந்த ஒரு இசைக்குழுவின் பாடல்.இந்த இசைக்குழு பற்றியும் இவர்களின் ’Jet Lag' ஆல்பம் பற்றியும் தெரிந்துகொண்டது எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் ‘கலகம்.. காதல்..இசை..’ புத்தகம் வாயிலாக.வழக்கம் போல கூகிள் தேடல் தான்.பாடல் வரிகள் நேரடியான ஹிந்தி அல்ல.பஞ்சாபி என நினைக்கிறேன்.ரொம்ப அர்த்தமுள்ள ஆழமான வரிகள்.அமைதியான சூழலில் கண்களை மூடி கேட்டால் தியானம் செய்த உணர்வு.Please..don't miss it.An awesome sufi rendition...!! 'Hindu'வில் வெளிவந்த Da Saz குழுவின் பேட்டியை படிக்க இங்கு க்ளிக்கவும்.


(எவ்வளவு தேடியும் வரிகளோ அல்லது ஆங்கில மொழிபெயர்ப்போ கிடைக்கவில்லை.)

இந்தப் பட்டியல் தொடரும் (நேரம் கிடைக்கும் போது)...

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

6174 - க.சுதாகர் - கனிதம், லெமூரியா, க்ரிஸ்டல்லோக்ராஃபி மற்றும் பல

6174 is known as Kaprekar's constant after the Indian mathematician D. R. Kaprekar. This number is notable for the following property:
  1. Take any four-digit number, using at least two different digits. (Leading zeros are allowed.)
  2. Arrange the digits in descending and then in ascending order to get two four-digit numbers, adding leading zeros if necessary.
  3. Subtract the smaller number from the bigger number.
  4. Go back to step 2.
The above process, known as Kaprekar's routine, will always reach its fixed point, 6174, in at most 7 iterations. Once 6174 is reached, the process will continue yielding 7641 – 1467 = 6174
-Wikipedia

சாதாரணமான வாழ்வியல் அனுபவங்களை வைத்து எழுதப்படுகின்ற புதினங்களிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வெவ்வேறு கதைக்களங்களில் எழுதப்படுகிற புனைவுகளில் எனக்கு எப்போதுமே தனி ஆர்வமுண்டு.அதுவும் அறிவியல் புனைவென்றால் அது ரொம்பவே ஸ்பெஷல்.அந்த வகையில் சென்ற புத்தகக் கண்காட்சியில் நிறைய நண்பர்களின் பரிந்துரையின் பேரில் சுதாகர் அவ்ரகளின் 6174 நாவலை வாங்கினேன்.

பொத்தாம் பொதுவாக Science fiction என்று சொல்லவிடமுடியாது. கனிதம், Geometry, Crystallography, Anthropology, கோலங்கள்,  அப்புறம் சங்கத் தமிழ் வெண்பாக்கள் அத்தனையும் உண்டு.
உள்ளடக்கத்தைப் பொருத்தவரையில் இது ஒரு பெரு விருந்து.

நிகழ்வு 1: கதை லெமூரியர்களின் காலத்தில் துவங்குகின்றது.அவர்களின் சக்தி பீடமாகிய ஒரு பிரமிட் (Transformers திரைப்படத்தில் காட்டப்படுகிற Tesseract மாதிரி ) பரிணாம வளர்ச்சியில் பிற்காலத்தில் தோன்றப்போகும் மனிதர்களின் கைகளில் கிடைத்தால் உலகில் பேரழிவு நிகழுமென அதை அழித்துவிட்டு தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதோடு முதல் அத்தியாயம் முடிகிறது.

நிகழ்வு 2: கொரிய, ரஷ்ய போர்க்கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் பயிற்சியில் ஈடுபடும்போது திடீரென ஏற்படும் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஒரு குறிப்பிட்ட கடல் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுபோகின்றன.இது சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்புகின்றது.நாடுகளுக்கிடையே போர்மூளும் அபாயத்தையும் மறைமுகமாக ஏற்படுத்துகின்றது.

நிகழ்வு 3: பூமியின் புவிவட்டப்பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இரண்டு மிகப்பெரிய விண் கற்கள் பூமியை எந்நேரமும் தாக்கிவிடக்கூடிய ஆபத்தில் விண்வெளியில் மிதந்தபடி இருக்கின்றன.

நிகழ்வு 4: சர்வதேச தீவிரவாத கும்பல் ஒன்று உலகத்தில் ஒரு பேரழிவை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தேடலோடு வெவ்வேறு நாடுகளில் முனைப்போடு இயங்கத்தொடங்குகின்றனர்.

நிகழ்வு 5:இஸ்ரோவின் விஞ்ஞானியான சடகோபன் பல வருடங்களுக்கு முன்பு தன் மாணவர்களாக இருந்த ஜானகி, ஆனந்த் இருவரையும் ஒரு முக்கியமான விஷயமாக தொடர்பு கொண்டு வரவழைக்கின்றார்.கேரளப் பல்கலைக்கழகத்தில் தொடங்குகின்ற இவர்களின் தேடல் பயணம் ஒடிஷா, மணிப்பூர், மியான்மர், தாய்லாந்து என நீள்கின்றது.

இந்த நிகழ்வுகளை ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி ஒரு 400 பக்க நாவல் என யோசிக்கவே மலைப்பாக இருக்கிறது.அதிலும் ஏகப்பட்ட தகவல்கள்.முன்பே சொன்னது போல வடிவக் கனிதத்தில் தொடங்கி...கோலங்கள் தொடர்பான தகவல்கள்.. சீலகந்த் மீன்..யமுனையாற்றின் டால்ஃபின்கள்.. பர்மாவின் பகோடா கோவில்கள்.. தமிழர்களின் வரலாறு... எண் கனித புதிர் வெண்பாக்கள் வரை அத்தனை தகவல்கள்.. அத்தனை hard work.

எனக்கு கணக்கே ஆகாது.நானே ஏகப்பட்ட கனிதப் புதிர்களையும் விநோத எண்களையும் கூகிள் பண்ண வேண்டியதாகிவிட்டது.அதுமட்டுமல்லாமல் கதையில் வருகிற தகவல்கள் வெவ்வேறு துறை சார்ந்த துணுக்குகள் எல்லாவற்றையும் கூகிளில் தேடி பின்னணியைத் தெரிந்து கொண்டேன்.புத்தகத்தின் முடிவில் சுதாகர் அவர்கள் தந்திருக்கின்ற referenceகளைப் பார்த்தாலே தகவல்களின் துல்லியத்தன்மை தெரிகின்றது

அவருக்கு சப்ஜெக்டின் மேல் இருக்கிற காதலாலோ என்னவோ தெரியவில்லை நாவல் முக்கியக்கட்டத்தை நெருங்க நெருங்க கதை சொல்லும் நடை ஒரு அறிவியல் விரிவுரையாளரை ஒத்ததாக மாறிவிடுகின்றது.இது என் போன்ற கனிதம் பிடிக்காத பார்ட்டிகளுக்கு கொஞ்சம் வேகத்தடை போட்டது போலாகலாம்.வடிவக் கனித விளக்கங்களை பல முறை படித்த பிறகே புரிந்து கொள்ள முடிந்தது.அவை கொஞ்சமே கொஞ்சம் எளிமையாகவும்..கதையோட்டத்தின் வேகத்தைக் குறைக்காத வகையிலும் இருந்திருக்கலாமென்பதே என் ஒரே ஆதங்கம்.

மற்றபடி...

சொன்னால் கொஞ்சம் மிகையாகவோ க்ளிஷேவாகவோ இருக்கலாம்.ஆனாலும்... தமிழின் டான் ப்ரவுன் என்று சொல்லக்கூடிய அத்தனை தகுதிகளையும் பெற்றிருக்கின்றார் சுதாகர் அவர்கள். My hearty congrats sir...!! Eagerly looking forward for your next novel..!!


Related Posts Plugin for WordPress, Blogger...